தேடல்

Sunday 12 February 2012

நான் சுவாசித்த அந்நியக் காற்று

( என் முதல் விமானப் பயணம் குறித்து எழுதியது )

சொந்தங்களைப் பிரிந்து,
சோகங்களை சுமந்தவனாய்..
வருவாய் தேடி - வானத்தை
வலம்  வரப் போகிறேன் .!



விமான நிலையத்தின்
வரம்புகளில் விடுவிக்கப்பட்டு,
விமானமருகில் நான்...




வானத்தை மட்டுமே,
பார்த்துப் பழகிய நானும்..
பறக்கப் போகிறேன்
விமானத்தில்...

ஆசையுடன் அடி எடுத்தேன் !
சன்னலோர இருக்கை
இல்லாததால் சலனம் மனதில்..




சிறு வயது
சேட்டைகளுக்குப் பிறகு,
இருக்கையுடன் இறுக்கிக் கட்டப்பட்டது,
இப்பொழுது தான் !

நான்
சிறகு விரித்த பறவையாய் பறக்க
சில வினாடிகள் மட்டுமே !




உறுமிய இரைச்சலுடன்,
ஓடிய ஆகாயக் கப்பல்..
உயரே பறந்தது
மெல்ல.. மெல்ல...
காதுகளும் அடைப்பட்டது - நேரம்
செல்ல.. செல்ல...
 


காலையில் நீர் தெளித்துப் போட்ட
கோலப் புள்ளிகளாய்,
சென்னை மாநகரம்..!

கட்டுகளில்
இருந்து விடுபட்ட,
கைதியாய் விடுதலையானேன்
தண்டனையிலிருந்து !

வங்கக் கடலைத் துறந்து..
அரபிக் கடலை அடைய...
விரைகிறது விமானம் !





தாய் மண்ணின்,
நினைவலைகளில் கரைகிறது காலம்...

அவசர ஆங்கிலத்தில் ஓர் அறிவிப்பு !
பத்தாயிரம் அடி உயரத்தில்
பறக்கிறதாம் விமானம்..
பதறுகிறது மனம்...




பவனி வரும்
பணிப்பெண்கள்,
பதார்த்தங்கள் பரிமாற்றம்..
பதறிய மனம் - இப்போது
படிப்படியான மாற்றம்...




காற்றை கிழித்து விமானம் செல்ல..
கனாவில் உறைந்தேன் மெல்ல...

அந்நிய மண்
அருகில் நெருங்க, நெருங்க
தாய் மண் - அந்நியமாய் !

ஆண்டுகளாய்,
ஆங்கிலேயனுக்கு அடிமைபட்டது
பற்றாகுறையாய் - கட்டப்பட்டேன்..
அடிமையாக இருக்கையோடு...
மீண்டும் தண்டனை !

உயரத்தில்
உல்லாசமாய் உலவிய
ஆகாயக் கப்பல்,
தரையில் தாவ ஆயத்தமாய்...

சீறிப் பாய்ந்து,
சிரிப்புடன் முத்தமிட்டது..
அந்நியத் தரையை !
இந்திய விமானம்





சில மணி நேர
சிறையிலிருந்து விடுபட்டவனாக
சுதந்திரமாய்  சுவாசித்தேன்
அந்நியக் காற்றை !

2 comments:

  1. நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete